சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், செல்போன் கடைக்கு வந்த நபர் ஒருவர் மொபைல் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்த வாடிக்கையாளர் மொபைலைத் தேர்ந்தெடுத்ததும், அவர் அதை நிச்சயம் வாங்கிவிடுவார் என்று நம்பிய கடைக்காரர், அதற்கான சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்களை பெட்டியில் வைத்து பேக் செய்துகொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், கையில் இருந்த மொபைலை நீண்ட நேரமாகப் பரிசோதிப்பது போல நடித்துக்கொண்டிருந்த அந்த நபர், கடைக்காரர் கவனிக்காத ஒரு நொடியில் மின்னல் வேகத்தில் மொபைலைத் திருடிக்கொண்டு கடையை விட்டு ஓடிவிட்டார்.

“>

 

இந்தச் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.