உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஏசி (Air Conditioner) இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள ஒரு பிரபல விற்பனையகத்தின் வெளியே, ஏசி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி ஒரு ஏசி இயந்திரத்தை லாவகமாகத் தூக்கிச் சென்றுள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் கடைகளுக்கு வெளியே பொருட்களைப் பாதுகாப்பற்ற முறையில் வைப்பது திருடர்களுக்குச் சாதகமாக முடிந்துவிடுகிறது என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
A guy Stole AC kept outside the Showroom, Noida UP😭, Obviously keeping AC outta Shop ain’t safe these days pic.twitter.com/0Hvx7t5N5D
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 28, 2026
