நடுரோட்டில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த பொருட்களை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்தது மனிதாபிமானத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

“என்னை கொள்ளையடிக்காதீர்கள், விட்டுவிடுங்கள்” என்று அந்த ஓட்டுநர் மக்களின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கெஞ்சியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொருட்களை அள்ளிச் சென்ற கும்பலின் செயல் நம் சமூகத்தின் இரக்கமற்ற முகத்தைக் காட்டுகிறது.

ஒரு மனிதன் தன் மானத்தையும் மரியாதையையும் விட்டுவிட்டு கதறுவதைக் கூட கண்டுகொள்ளாமல், சக மனிதனின் வலியில் லாபம் தேடும் இந்த மனநிலை மிகவும் கொடூரமானது.

“>

 

பணத்திற்கும் பொருளுக்கும் கொடுக்கும் மதிப்பை நாம் சக மனிதனின் உயிருக்கு கொடுப்பதில்லை என்பதும், இயந்திரத்தனமான இந்த உலகில் ஈரமில்லாத இதயங்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.