சென்னை வடபழனியில் பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இருக்கும்போதே எதற்கும் அஞ்சாமல் ஒரு வீட்டின் அறையை நோட்டமிட்டு, கதவைத் திறந்து உள்ளே புகுந்து அங்கு சார்ஜில் போடப்பட்டிருந்த இளைஞரின் செல்போனை லாவகமாகத் திருடிச் சென்றுள்ளார். நொடிப் பொழுதில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அந்தப் பகீர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் வீட்டின் கதவுகளை எப்போதும் பூட்டி வைக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் துணிச்சலான கொள்ளையனைப் பிடிக்க வடபழனி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>