இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பல வினோதமான வீடியோக்கள் வைரலானாலும், தற்போது வாலிபர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தையே அதிர வைத்துள்ளது. தனது மனைவி தன்னை கொடூரமாகத் தாக்குவதை லேப்டாப் கேமரா மூலம் ரகசியமாகப் பதிவு செய்துள்ள அந்த இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்த நரக வேதனையை அனுபவித்து வருவதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “திருமணம் செய்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்” என்றும் ஆண்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
I would request all our Men's, to see this video carefully.
Don't wait like this for 2 years to complain and raise the voice.
This man being a husband is being assaulted brutally by his wife.
Raise you voice early,don't suffer. pic.twitter.com/m62GOohgB0
— SK (@Sreekrish555) April 23, 2026
இந்த வீடியோ ஒரு திட்டமிடப்பட்ட ‘ரீல்’ (Reel) என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், இதன் பின்னணியில் உள்ள சமூகக் கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. “ஒரு பெண் பாதிக்கப்பட்டால் ஊடகங்களும் சட்டமும் உடனே ஓடி வருகிறது, ஆனால் பாதிக்கப்பட்ட ஆணின் நிலையை உலகம் ஏன் கேலி செய்கிறது?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு ஆணுக்கு இழைக்கப்படும் கொடுமை எந்த விதத்தில் குறைவானது? என்ற விவாதத்துடன் இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
