தமிழகத் தேர்தல் களத்தில் நட்சத்திரங்களின் வருகை களைகட்டி வரும் நிலையில், மூத்த இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜ் தனது மகனும் நடிகருமான சாந்துவுடன் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் தங்களின் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்தார். “நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்” என்று தெரிவித்த அவர், இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் அனைவரும் தங்களது ஓட்டினைப் பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
"மிஸ் பண்ணாதீங்க.. நல்லவங்கள தேர்ந்தெடுத்தா நாட்டுக்கு நல்லது" – தனது மகனுடன் வந்து வாக்கு செலுத்திய பின் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பாக்கியராஜ் வைத்த கோரிக்கை#Chennai | #KBhagyaraj | #Voting | #TNAssemblyElection2026 | #TNElection2026 | #PolimerNews pic.twitter.com/vsJsqPcqIt
— Polimer News (@polimernews) April 23, 2026
குறிப்பாக, முதல்முறை வாக்களிக்க வந்திருக்கும் இளம் தலைமுறையினருக்குப் பாக்கியராஜ் விடுத்த அழைப்பு தற்போது வைரலாகி வருகிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்கள் இருப்பதால், அவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும், ஜனநாயகத் திருவிழாவில் பங்கெடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
