ரீல்ஸ் மோகம் ஒருவரின் உயிரையே பறிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பயங்கரமான சாட்சியாக மாறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இளைஞர்கள் ஒரே பைக்கில் அதிவேகமாகச் சென்று ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக, கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு ‘கெத்தாக’ வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்துள்ளது. இரண்டு கன்டெய்னர் லாரிகளுக்கு இடையே புகுந்து செல்ல முயன்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
मऊगंज NH-135 पर ‘खूनी रेस’ का खौफनाक अंत, 3 लड़के बाइक से स्टंट कर रहे थे, हाथ में कट्टा, दूसरी बाइक पर इनके दोस्त वीडियो बना रहे थे अगले ही पल ट्रेलर से भिड़ंत… 3 भाइयों की मौत हो गई कितना खौफनाक और दर्दनाक है pic.twitter.com/v9zdj1Vkoq
— Anurag Dwary (@Anurag_Dwary) April 19, 2026
இந்த கோர விபத்தில் பைக்கில் இருந்த மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நலிந்து உயிரிழந்தனர். அதிவேகம், கையில் ஆயுதம், கவனக்குறைவு எனச் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டது அவர்களின் வாழ்வையே முடித்து வைத்துள்ளது. ரீல்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என இளைஞர்கள் தங்களின் உயிரோடு விளையாடுவதும், பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் சாகசம் செய்வதும் எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
