தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக திமுக பெண் நிர்வாகி ஒருவர் முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், 25 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஒருவரால், பொதுமக்களின் மனக்குறைகளை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
“குடும்பத்துக்கே தலைவர் ஆக தகுதி இல்லாத ஒருத்தர்
நாட்டுக்கு தலைவர் ஆக ஆசைபடலாமா!?#DMK4Perambur pic.twitter.com/ag7hN86KNW— Vaishnavi (@vaishnavi_cbe) April 15, 2026
பொது மேடையில் தனது குடும்பத்தினர் குறித்து விஜய் பேசிய விதம், அவரது பிள்ளைகளின் மனநிலையை எப்படிப் பாதிக்கும் என்பதை அவர் சிந்திக்கவில்லை என அந்தப் பெண் நிர்வாகி சாடியுள்ளார். ஒரு கணவராகத் தனது மனைவியின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவது எவ்வளவு பெரிய மன உளைச்சலைத் தரும் என்பதைச் சுட்டிக்காட்டி அவர் பேசிய இந்தக் காணொளி, தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
