கனடாவைச் சேர்ந்த பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜான் டிஸே என்பவர், கைகளால் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாத, தானாகவே பறந்து வந்து நிழல் தரும் ஒரு நவீனக் குடையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்தக் குடை, அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் அதைப் பயன்படுத்துபவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர் எங்குச் சென்றாலும் தலைக்கு மேலே தானாகவே பறந்து வந்து மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
A Canadian youtuber invented a flying umbrella that follows him everywhere
[📹 ibuildstuff_yt]
pic.twitter.com/Fg61R3mYSF— Massimo (@Rainmaker1973) January 29, 2026
தொடக்கத்தில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட இந்தக் குடையை, பல மாத கால முயற்சிக்குப் பிறகு தற்போது முழுமையான தானியங்கி முறையாக அவர் மேம்படுத்தியுள்ளார். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 15 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்ட இந்தக் குடை, தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கருதப்பட்டாலும், பலத்த காற்று வீசும் நேரங்களில் இதன் நிலைத்தன்மை குறித்து இன்னும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் சாதாரணப் பொருட்களையும் வியக்கத்தக்க வகையில் மாற்ற முடியும் என்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
