இந்தியாவிலிருந்து படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்ற குர்மீத் ஜீதேஷ் என்ற மாணவர், அங்குள்ள போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு என்ன தெரியுமா?

​அந்த நாட்டுக்குச் சென்ற வெறும் 3 மாதங்களிலேயே (12 வாரங்கள்), ஆன்லைன் மூலமாகச் சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசி, அவர்களை நேரில் வரவழைக்க முயற்சி செய்துள்ளார். ஒரு சிறுமியைச் சந்திக்க அவர் நேரில் சென்றபோது, அங்கே மறைந்திருந்த தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

​தற்போது அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெளிநாடு செல்லும் மாணவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.