அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த எரிகா டெய்ட் என்ற பெண், தான் 7 மணி நேரம் இறந்துவிட்டு மீண்டும் உயிர் பிழைத்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மலையேற்றத்தின் போது 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த எரிகாவுக்கு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவ ரீதியாக இதயம் துடிப்பது நின்றது.
அந்த 7 மணி நேர மரண அனுபவத்தின் போது, தனது உடல் சிதைந்து கிடப்பதை மேலிருந்து பார்த்ததாகவும், அப்போது உடல் சார்ந்த எல்லா வலிகளும் மறைந்து ஒரு ஆழ்ந்த அமைதியை உணர்ந்ததாகவும் அவர் விவரிக்கிறார்.
சொர்க்கம் அல்லது நரகம் என்று நாம் நினைப்பது போல அங்கு எதுவுமே இல்லை என்றும், ஒரு பிரகாசமான பேரொளியை மட்டுமே கண்டதாகவும் எரிகா கூறுகிறார். அங்கு கடவுளோ அல்லது தீர்ப்பு வழங்கும் தேவதைகளோ இல்லை, மாறாக எல்லையற்ற அன்பும் அமைதியும் மட்டுமே நிறைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஆன்மீகவாதியாக மாறியுள்ள எரிகா, மரணம் என்பது ஒரு மாயை என்றும், நாம் அனைவரும் ஒரே சக்தியால் இணைக்கப்பட்டுள்ளதால் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் அன்போடு வாழ வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.
