இயற்கையின் விதிகளில் பசி என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்த்தும் வகையில், முதலை ஒன்று தனது சக முதலையின் காலையே கடித்துத் துண்டித்து விழுங்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலையின் அடைப்பு ஒன்றில் பராமரிப்பாளர் உணவுக்காக இறைச்சித் துண்டுகளை வீசியபோது, அங்கிருந்த முதலையினரிடையே கடும் போட்டி ஏற்பட்டது.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) December 18, 2025
அப்போது ஒரு பெரிய முதலை, இறைச்சி எனத் தவறாக நினைத்து அருகில் இருந்த மற்றொரு முதலையின் காலைத் தனது தாடைகளால் கவ்விப் பிடித்தது. அடுத்த நொடியே அந்த முதலை ‘டெத் ரோல்’ எனப்படும் சுழற்சி முறையைப் பயன்படுத்தி, சக முதலையின் காலைப் பெயர்த்து எடுத்துத் தின்றது. இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த 16 வினாடி வீடியோ, “இயற்கை மிகவும் இரக்கமற்றது; அங்கு உறவுகளுக்கு இடமில்லை” என்ற விவாதத்தை இணையவாசிகள் இடையே கிளப்பியுள்ளது. விலங்குகளின் உலகில் பசி ஏற்படும்போது அவை சொந்த இனம் என்றும் பாராமல் வேட்டையாடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இந்தத் திகைப்பூட்டும் வீடியோவைப் பார்த்த பலரும், வனவிலங்குகளின் வாழ்வியலில் நிலவும் கடுமையான எதார்த்தத்தை எண்ணித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
