தலைநகர் டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர், கார் ஓட்டுநர் ஒருவரை அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்திற்குரிய ஆவணங்களை (Papers) ஓட்டுநர் வைத்திருக்கவில்லை என்பதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவலரே, இப்படி நடுரோட்டில் வைத்து ஒருவரைத் தாக்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A Delhi Police traffic constable beat up a driver for a full half hour, The reason being the driver not having the papers
pic.twitter.com/YXyzyFyP4X— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 15, 2025
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆவணங்கள் இல்லை என்றால் சட்டப்படி அபராதம் விதிக்கலாமே தவிர, இப்படி அராஜகமாகத் தாக்குவது முறையல்ல என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
