தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தின் உதவியுடன், தென்னாப்பிரிக்காவுக்கு 350 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும், மெத்தியூ (72 ரன்கள்) மற்றும் யான்சென் (70 ரன்கள்) ஆகியோர் அமைத்த சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக போட்டியில் சற்று நம்பிக்கை பிறந்தது.
<a href="http://
INDIA 🇮🇳 WON THE GAME BUT WHAT A FIGHTBACK BY SOUTH AFRICA 😱
From 11/3 to 332/10 !!!! Absolute madness 🔥 Great Team Spirit from the Proteas 🙌
3 MATCH SERIES | INDIA STARTS WITH 1-0 🏆#INDvSA
— CricBharat (@DilPrabhat88) November 30, 2025
“>
இறுதிவரை கடுமையாகப் போராடிய தென்னாப்பிரிக்க அணி, கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
