ஹரியானாவின் பானிபட் பகுதியில் நடந்த ஒரு மனிதாபிமான காட்சியைப் பார்த்து இணையம் முழுவதும் கண்கலங்கியுள்ளது. பேச முடியாத தந்தை ஒருவருக்கு அவரது சிறிய மகளே குரலாக மாறியுள்ளார். சாலை ஓரத்தில் சிறிய அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்த தந்தை-மகள் ஜோடி, அன்பும் அர்ப்பணிப்பும் என்னவென்று உலகுக்குக் காட்டியுள்ளனர்.
Papa can’t speak, but his daughter
runs the shop helping him every day📍 Panipat: Old Bus Stand, near Shukdev Nagar Gate 1, opposite Parveen Medical
If you’re nearby, buy something
A little help can mean a lot 🙏🏻 pic.twitter.com/wfD7f8NgUQ— Adv. Homi Devang Kapoor (@Homidevang31) October 19, 2025
இவரது கடை “சுக்தேவ் நகர் கேட்–1, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பரவீன் மெடிக்கல் எதிரில்” அமைந்துள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் சிறுமி தான் பேசுகிறார். தந்தை சைகை மொழியில் பதிலளிக்கிறார். சில வாடிக்கையாளர்கள் குறைந்த விலைக்கே பொருள் தருமாறு கேட்டபோது, தந்தை முடியாது என சைகையால் கூற, அதை மகள் மென்மையாக விளக்கி சமாதானப்படுத்தும் காட்சி பலரையும் உருக்கியுள்ளது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @Homidevang31 என்ற பயனாளர் பகிர்ந்துள்ளார். “அவர்கள் கடைக்கு சென்று ஏதாவது வாங்குங்கள், சிறிய உதவியும் அவர்களுக்கு பெரும் ஆதரவாகும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். அக்டோபர் 19 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது 8 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. “இவர்களின் வாழ்க்கையில் மகளிர் தெய்வம் லட்சுமி அருளுடன் செழிக்கட்டும்” என்று ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். “தந்தை மகள் உறவு இதைவிட அழகாக இருக்க முடியாது” என்று பலரும் பெருமைப்பட்டுள்ளனர்.
