இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் ஒரு இடத்தில் பாம்பு ஒன்று இருக்கிறது. அதனை அங்கிருந்த ஒருவர் தனது செருப்பால் அந்த பாம்பை அடிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாம்பு அந்த செருப்பை மனிதரென்று நினைத்து கடிக்கிறது. இதில் பாம்பின் விஷம் வெளியேறியது.
அது அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ “இதை மனிதனின் உடல் என்று நினைத்துக் கொள்ளுங்கள்”என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
