குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துமாஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் சாகசம் செய்வதற்காக சில இளைஞர்கள் சொகுசு காரினை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த கார் மண்ணுக்கடியில் சிக்கிய நிலையில் அதனை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த கார் மண்ணுக்கடியில்  பாதி அளவுக்கு சிக்கிய நிலையில் இளைஞர்கள் அதனை வெளியே எடுக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த கடற்கரையில் தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள் காரை ஓட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.