மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கானோ மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது.

இந்நிலையில் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அதே சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இந்த தகவல் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் போது பேருந்து ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.