
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடு கூட்டன்காடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா (34). இவரை கடந்த 2014ஆம் ஆண்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்ததால் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
அதன்படி இந்த வழக்கில் சிவாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் மிதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் சிறப்பான முறையில் செயல்பட்ட போலீசார் மற்றும் திறம்பட வாதிட்ட வழக்கறிஞர் ஆகியோருக்கு நீதிபதி பாராட்டை தெரிவித்தனர்.