
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஓட்டுப்பட்டையைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரை தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டிருந்தனர்.
அந்த ஆம்புலன்ஸ் குன்னூர் லெவல் கிராஸ் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது, பின்புறக் கதவு திடீரென திறந்துவிட்டதால், அந்த நோயாளி நேராக சாலையில் கீழே விழுந்துள்ளார். இந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
#WATCH | நீலகிரி: குன்னூரில் நோயாளியை அழைத்துச் சென்ற தனியார் ஆம்புலன்ஸின் கதவு திடீரென திறந்து, ஸ்ட்ரெக்சரில் இருந்த நோயாளி சாலையில் விழுந்ததால் அதிர்ச்சி.#SunNewa | #Nilgiris pic.twitter.com/03dciR2WPw
— Sun News (@sunnewstamil) June 28, 2025
இச்சம்பவம் நடந்ததும், அந்த வழியாக வந்த வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அருகிலிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, விரைந்து ஓடி அந்த நோயாளிக்கு முதற்கட்ட உதவிகளை வழங்கி, மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.