விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு என்ற தகவல் உண்மை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை கூறியதாவது, விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவலை வெளியிட வேண்டாம்.

நீர் மேலாண்மை மாநில அரசின் கீழ் தான் வரும் என்பதால் கட்டணம் வசூல் என்பது அவர்களது முடிவு. நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கத்திலேயே நீர் மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு என பரவும் தகவலில் உண்மை இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.