பீகாரில் 20 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலைக்காக பெங்களூருக்கு சென்றுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமும் உள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த அந்த பெண்ணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பெண் சோகமான ரீல்ஸ் எடுப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் 13 வது மாடியில் நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.