கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதியான மோயர் சதுக்கம் மற்றும் குண்டன் சோலை வனப்பகுதியில், சுற்றுப்புறம் குப்பையாக மாற்றப்பட்டிருந்ததைக் கவனித்த அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்கள் போன்ற திட குப்பைகள் பெரும்பாலும் சுற்றுலா பயணிகளால் வீசப்படும். இது, சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் நிலையில் உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து இந்த சுத்தம் செய்யும் பணியை முன்னெடுத்தனர்.

பின் குப்பைகளை வைத்து யானை உருவம் உருவாக்கப்பட்டது.  அவர்கள் சேகரித்த குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி நிலையத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியுடன், மற்ற பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “வனப்பகுதியில் வீசப்படும் மாசுபடும் பொருட்கள் வனவிலங்குகளின் உணவுடன் கலந்து அவர்களின் உயிரை ஆபத்தாக்குகிறது” என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.