தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்பனை செய்யப்படும் எனவும், அதற்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் எனவும் கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் நலன் கருதி அவர்களது வருவாயை பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும்.

இந்த இணையதளத்தின் மூலமாக கால்நடைகளில் சந்தை விலை நிலவரம், பல்வேறு சந்தைகளின் இருப்பு நிலவரம் உள்ளிட்டவற்றை விவசாயிகளால் அறிந்து கொள்ள முடியும். இந்த தகவல் மூலம் உரிய விலைக்கு கால்நடைகளை விற்பனை செய்து விவசாயிகளுக்கு பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த பணிகள் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.