ஜம்மு நகரில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பஸ்ஸிலிருந்து இறங்கி வந்த பெண் ஒருவரிடம் பையை பறிக்க முயன்ற சிறுவனை அவர் தைரியமாகவே எதிர்த்தார். அந்த பெண் அந்த சிறுவனை தடுத்து நிறுத்து நடு ரோட்டில் செருப்பால் வெளுத்தெடுத்தார்.

பச்சை சல்வார் அணிந்த அந்த பெண், “அவன் என்ன செய்றான் பாருங்க!” என கோபத்துடன் கூச்சலிட்டு, தொடர்ந்து பலமுறை கைகளைச் சுழற்றி சிறுவனை தாக்கினார். அருகில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டே நின்றனர். ஒருவரும் போலீசாரை அழைக்கவோ, சிறுவனை காப்பாற்றவோ முயற்சி செய்யவில்லை

சில நிமிடங்களில் அந்த பெண், தனது பையை மீட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது அந்த சிறுவன் காயங்களுடன் நடந்து செல்லும் காட்சி, பலரை பாதிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை ‘Arihant Shelby’ என்ற பாப்புலர் ‘X’ பயனர் பகிர்ந்திருந்தார்.

வீடியோ வைரலான பிறகு, பலரும் அந்த பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். சிலர் இதை “கர்மா நேரில் பட்ட சம்பவம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சிலர் சட்ட நடவடிக்கை இல்லாமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதோ அந்த வீடியோ,