
ஆந்திரா மாநிலம் கட்வால் மாவட்டத்தில், திருமணமான ஒரே மாதத்தில் மர்மமாக காணாமல் போன தனியார் நில அளவையாளர் மற்றும் நடன ஆசிரியரான 32 வயதான தேஜேஸ்வர் என்பவர் ஆற்றுக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 18ஆம் தேதி இவருக்கும் ஐஸ்வர்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், ஜூன் 17ஆம் தேதி தேஜேஸ்வர் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டது. பல நாட்கள் கடந்த பின்னர், தற்போது அவரது சடலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, தேஜேஸ்வரின் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய் சுஜாதா ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை நடத்தினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தேஜேஸ்வரின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, ஐஸ்வர்யா மற்றொரு வங்கி ஊழியருடன் காதல் தொடர்பில் இருந்தார் என்றும், தனது மகனின் கொலைக்கான சூழ்ச்சியை ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
தேஜேஸ்வரின் குடும்பத்தினர் கூறுகையில், “திருமணம் நடைபெறுவதாக இருந்த பிப்ரவரி மாதத்தில், ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். சில நாள்களில் மீண்டும் திரும்பி வந்து, தேஜேஸ்வரை நேசிப்பதாகக் கூறி திருமணத்தில் இணைந்தார். அவரை நாங்கள் எச்சரித்தும் கேட்கவில்லை,” என கூறினர். தற்போது அவருடைய மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என அவர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலைச் சம்பவம், இந்நிலையில் இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்குடன் ஒப்பிடப்படுகின்றது. ராஜா மே 11 அன்று திருமணம் செய்து கொண்டிருந்தார். மே 23 அன்று ராஜா மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் காணாமல் போன நிலையில் ஜூன் 2 அன்று ராஜாவின் உடல் மேகாலயா பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கொலை திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது. தற்போது, சோனம் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடந்த தேஜஸ்வர் மரணத்தில் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தியதில், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கள்ளக்காதலனுடன் அவர் மணி கணக்கில் பேசியுள்ளார். இது பற்றி கணவன் வீட்டிற்கு வரும்போது எல்லாம் தன் மனைவியிடம் கேட்க அவர் மழுப்பலாக பதில் கூறினார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக தேஜஸ்வர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் அதன் பின் வீட்டிற்கு திரும்பவில்லை. அதன் பிறகு தான் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்வர்யாவின் தாய் ஒரு வங்கியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் அந்த வங்கியில் கேஷியராக பணிபுரியும் ஒருவருடன் அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.
அவர் ஐஸ்வர்யா வீட்டிற்கு அடிக்கடி சென்ற நிலையில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர். திருமணத்திற்கு பிறகும் என்னுடைய கள்ளக்காதலனை கணவன் ஊருக்கு செல்லும் நேரத்தில் எல்லாம் வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தேன்.
எனக்கும் யாரும் கொடுக்காத வகையில் இன்ப உல்லாசத்தை கள்ளக்காதலன் கொடுத்த நிலையில் கிட்டத்தட்ட 2000 முறைக்கு மேல் அவருடன் செல்போனில் பேசினேன். இது என்னுடைய கணவருக்கு தெரிய வந்த நிலையில் அவர் என்னுடன் சண்டை போட்டதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி கூலிப்படையினருக்கு என்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து பணம் கொடுத்தேன்.
அதன்படி காரில் வந்த நபர்கள் நிலம் அளக்க வேண்டும் என தேஜஸ் வரை அழைத்துச் சென்று கொலை செய்தனர். அவர்கள் என் கணவரை குத்தி கொலை செய்த நிலையில் பின்னர் உடலை ஒரு பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டோம் என்றார். இந்த கொலைக்கு ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதாவும் உடந்தை. தற்போது தலைமறைவாக உள்ள வங்கி கேஷியரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணம் ஆன ஒரே மாதத்தில் கணவனை கூலிப்படையை ஏவி மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.