
பீஹாரைச் சேர்ந்த 68 வயது வயதான ஒரு மூதாட்டிக்கு வயிற்றுப் பகுதியில் நீண்ட நாட்களாக வீக்கம் மற்றும் கடுமையான வலியை அனுபவித்து வந்துள்ளார். மார்பகப் புற்றுநோய் நிலைமையில் இருந்திருந்த அந்த மூதாட்டிக்கு முதலில் பீஹாரில் மேற்கொண்ட சோதனையில் மிகப் பெரிய கருப்பை (ovary) கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கட்டி புற்றுநோயா அல்லது இல்லையா என்பது தெளிவாக தெரியாததால், சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டது.
இதையடுத்து, அவர் புனேவுக்கு சென்று ஜெஹாங்கீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இங்கு, மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நீனா மான்ஸுகானி மற்றும் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆன்கோ சயின்ஸஸ் இயக்குநருமான டாக்டர் சி. பி. கொப்பிகர் ஆகியோர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு வழிகாட்டியது. கட்டியின் இயல்பும், அதன் அளவும் பெரிதும் கவலைக்கிடமாக இருந்ததால், முழுமையான சோதனைகள் மற்றும் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்ட சிகிச்சை நடைபெற்றது. “இந்தச் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை திறமை மட்டுமல்ல, நுட்பமான மருத்துவ தீர்மானமும் தேவைப்பட்டது,” என டாக்டர் மான்ஸுகானி கூறினார்.
44 x 37 x 30 செ.மீ அளவிலான கட்டி, 16 லிட்டர் திரவத்துடன் சுமார் 18 கிலோ எடையுடன் இருந்தது. இது ஒரு “Borderline ovarian mucinous cystadenoma” எனும் குறைந்த அளவில் தீவிரம் உள்ள அரிய வகை கட்டி என மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும், நோயாளியின் ஒப்புதலுடன் கருப்பை மற்றும் அதன் உடன் தொடர்புடைய உறுப்புகளையும் அகற்றும் ஹிஸ்டிரெக்டமி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின், நோயாளியின் உடல் எடை 116 கிலோ இருந்து 96 கிலோவாக குறைந்தது. 10 நாட்களில் உடல்நிலை மேம்பட்டு, மருத்துவமனையிலிருந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
“இதுவே நோயாளி மையமாக கொண்ட சிறந்த சிகிச்சையின் உதாரணம்,” என டாக்டர் கொப்பிகர் தெரிவித்தார். “வயதையும், புற்றுநோய் வரலாறையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாயிருந்தது. மேலும் மருத்துவ குழு ஒருங்கிணைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்ததால் தற்போது மூதாட்டி நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.