
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபடும் திருடர்களை கைது செய்ய ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்களை திருடிய வெங்கடேஷ் என்பவரை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 24 திருட்டு செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.