
கோவையில் அமுல் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனால் அவரது குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி மரணம் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என்று கூறியுள்ளார்.