விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற பெண் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களான எவரெஸ்ட், எல்புரூஸ், கிளிமாஞ்சாரோ உள்ளிட்டவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார். திருமணமாகி 2 பெண் குழந்தைகளுக்கு தாயான தமிழ்ச்செல்வி , தனது முதல் முயற்சியிலேயே எவரெஸ்டை அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2023ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறி சாதனை புரிந்த தமிழ்ச்செல்விக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர்.