டெல்லியில் தன்யா தியாகி என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கனடாவில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்து  வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கனடாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கூறும்போது, இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மரணம் வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது.

அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடா அதிகாரிகளுடனும், மாணவியின் குடும்பத்தினருடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்து கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதேப்போன்று கடந்த மார்ச் மாதம் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடலில் மாயமானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.