
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்றம் உள்ள தேவர்களது மதிப்பெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 23ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
இப்பட்டியலில் இடம்பெறாத மதிப்பெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டல், மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ம் பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.