சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப் குமார் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் பிரதிப் குமார் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜுரிக் என்பவர் உதவியுடன் கானா ஜான் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. எனவே பிரதீப் குமார், ஜான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 11 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்‌. இதனையடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஜூரிக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.