
பாட்னா ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பண மோசடி நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் ஒரு பெண் டிக்கெட் எழுத்தரிடம் சென்று டிக்கெட் வாங்குகிறார்.
அவர் உஜ்ஜைனுக்கு செல்வதற்காக 2 டிக்கெட்டுகளை கேட்டபோது அதற்கான விலை ரூ. 840 என்று அந்தப் பெண் தவறாக பதில் அளித்தார். அதன் பின் 2 டிக்கெட்டிற்கும் சேர்த்து ரூ.650 தான் என்று கூறினார். அப்போது பயணி ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 325 என்றும், 2 க்கும் ரூ.650 தானே என்று கேட்டபோது அந்தப் பெண் சூப்பர் வசதிக்காக சேர்த்து ரூ. 650 ஆக வசூலிக்கப்படுகிறது என்று கூறினார்.
What sort of forgery is being done in broad daylight ?
— Bihar_se_hai (@Bihar_se_hai) June 20, 2025
அதற்கு அந்த பயணி ஒரு டிக்கெட்டிற்கு ரூ.15 லஞ்சமாக வாங்குகிறீர்களா? என்று கேட்டார். அதனை கேட்டு அந்த பெண் எழுத்தர் பதில் பேச முடியாமல் தடுமாறினார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு வைரலான வீடியோவால் ரயில்வே துறை டிக்கெட் எழுத்தர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மற்ற பணியாளர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் என்று பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதால் புதிய மாற்றம் உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.