பெங்களூரு – சூரத் செல்கின்ற ஏர்இந்தியா விமானத்தில், பயணியாக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, “விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்” என மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. CISF பாதுகாப்பு படையினரால் அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஏர்இந்தியா AI-IX2749 விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் வ்யாஸ் ஹிரால் மோகன்பாய் (36), இரண்டு பேக்குகள் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். விமான விதிகள் ஒரு கை பை மட்டுமே அனுமதிக்கும் நிலையில், அவர் ஒன்று க்ரூ மையப்பகுதியில் விட்டு மற்றொன்றுடன் தனது இருக்கை 20F-க்கு சென்றார். இது குறித்து விமான ஊழியர்கள் கேட்டதற்கு, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, “என் பேக்கைப் நீங்கள் இடமாற்றினால், இந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்” என்று கூறி பயணிகளையும் விமான ஊழியர்களையும் பதற வைத்துள்ளார்.

விமான கேப்டன் உடனடியாக பாதுகாப்புப் படையை அழைத்தார். CISF அதிகாரிகள் வந்தும், பெண் மருத்துவரை விமானத்திலிருந்து இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் விமானம் 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு புறப்பட்டது. காவல்துறையினர் விசாரணையில், அந்த மருத்துவர் போலீசாரிடம் கூட மோசமாக பேசியுள்ளார். அவரது கணவர், “அவருக்கு முன்பும் சில இடங்களில் அப்படித்தான் நடந்தது, தற்போது குடும்பத்தைச் சந்திக்க குஜராத்திற்குப் பயணிக்கிறார்” என தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் விதிகளை மதிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கிறது. விமான ஊழியர்களின் அறிவுறுத்தலை பின்பற்றாததும், வெறித்தனமாக நடப்பதும் பாதுகாப்புக்கு பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.