
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி ஆம்னி காரின் மீது மோதியது.
இந்த கோரவிபத்தில் ஆம்னி காரில் இருந்த 6 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் வெளியே வர முடியாமல் தவித்தனர். மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்னி காரில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது கரூர் தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது