தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி அவரது மகன் ஜோதி மணிகண்டன் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அறிவாளால் தாக்கினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரவிக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை ரூ. 1000 அபராதமும், ஜோதி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறந்த ரூ.5000 அபராதமும், ரவியின் மனைவியை  விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரை நீதிபதி பாராட்டினார்.