
பீகார் மாநிலம் லக்கி சராய் மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார். இவர்கள் கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு நேற்று அதிகாலை திரும்பி இருக்கின்றனர்.
அப்போது ஒன்றரை மணி அளவில் ஆயுதமேந்திய சிலர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலைக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கும் காவல்துறையினர் அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.