
சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவி அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் கார் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டதால் மாணவி யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த 20 லட்ச ரூபாய் பணத்தை திருடி காதலனிடம் கார் வாங்க கொடுத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து அவர் மாணவியிடம் பேசுவதை நிறுத்தி, ஏமாற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது தந்தையிடம் நடந்தவற்றை கூறி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.