இந்தியாவில் சட்டீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. அதனால் மத்திய அரசு நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட்- ஒடிசா எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த தேடுதல் வேட்டையில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஒடிசா சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து செயல்பட்டனர். அப்போது சுந்தர்கர் மாவட்டம்  ரூர்கிழா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் நக்சலைட்டுகள் கண்ணிவெடிகளை மறைத்து வைத்துள்ளனர்.

அதில் பாதுகாப்பு படைவீரர் சத்யபீன் குமார் சிங் (34) சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  அந்த கண்ணிவெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர் உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.