திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி சுதா (40) என்ற மனைவியும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இதில் சுதா தன் வீட்டின் அருகே உள்ள ஒரு பகுதிக்கு சம்பவ நாளில் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை முருகன் (48), அஜித் குமார் (38) ஆகியோர் வந்த நிலையில் அவர்கள் திடீரென சுதாவை வழிமறித்துள்ளனர். அவர்கள் சுதாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் சுதா ஆசைக்கு இணங்க மறுத்ததால் பாண்டவையாற்றில் அந்தப் பெண்ணை தள்ளிவிட்டனர். அவர்கள் இருவரும் சுதாவை நீரில் தள்ளிவிட்டு மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் இருவரும் பதற்றுத்துடன் ஓடி வருவதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் வாலிபர்கள் வந்த திசையை நோக்கி சென்ற போது அங்கு அந்த பெண் அலங்கோலமான நிலையில் கிடந்தார்.

பின்னர் சுதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முருகன் மற்றும் அஜித்குமார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.