ஆக்ராவில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. அப்போது திருமண மண்டபத்திற்கு வந்த மணப்பெண் தனக்கு ஏசி அறை வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அவரை அவமதித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த மணப்பெண் ஏசி அறையில்லாததால் கடைசி நேரத்தில் திருமணத்தையும் நிறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் அவர்களிடம் பேசி அவரை கேட்டதற்கு என்னை அவமதிக்கிறார்கள். குறைந்தபட்ச தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இப்பவே இப்படி இருக்கிறது திருமணமானால் என்ன நடக்குமோ?. என் திருமண வாழ்க்கை நரகமாகிவிடும் என்று மணப்பெண் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.