
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போய் ரக விமானம் லண்டன் செல்வதற்காக புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள் விமானிகள், ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியில் மோதி வெடித்து சிதறியது.
அவசர வழி வழியாக கீழே குதித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மீதமுள்ள 241 பேரும் உயிரிழந்தனர். விடுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலரும் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானத்தில் பணிப்பெண்களான ரோஷினி, காத்தோய் ஷர்மா, மிதாலி உள்ளிட்டோர் இருந்தனர்.
View this post on Instagram
இதில் ரோஷினி இன்ஸ்டாகிராமிலும் பிரபலமானவர். இவர் சக விமான பணிப்பெண்களுடன் ரீல்ஸ் எடுத்து சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அவர்கள் கேமராவை பார்த்து போஸ் கொடுக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.