குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளில் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டதில் 241 பயணிகள் உயிரிழந்தனர். 242 பேர் மொத்தம் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

இந்த விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்ததால் மருத்துவ மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் கருகி அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதால் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு முழுமையான இறப்பு குறித்த தகவல் வெளிவரும் என்று‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து விமானங்களின் நிலை குறித்து அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது.

இந்த விமான விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் அவர் அவசர கதவை திறந்து வெளியே குதித்ததாக கூறினார். அதாவது விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அவரது சீட் மட்டும் தனியாக கழன்ற நிலையில் பின்னர் அவசர கதவை திறந்து உடனடியாக வெளியே குதித்ததாக கூறினார். பின்னர் கண்விழித்துப் பார்த்தபோது தன்னை சுற்றிலும் உடல்கள் சிதறி கிடந்ததாகவும் தான் உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை.

ஆனால் உயிர்ப்பிணித்து விட்டேன் என்பதை நம்ப முடியவில்லை எனக் கூறினார். இந்நிலையில் விமானத்தில் பயணிகளிடம் ஆபத்து நேரத்தில் அவசர கால கதவை எப்படி திறக்க வேண்டும் என ஒரு விமான பணிபெண் விளக்கும் நிலையில் ஒருவர் அதனை செய்து காட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பயணி அவசர கதவை திறந்து வெளியே வந்ததாக கூறிய நிலையில் தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

 

View this post on Instagram

 

A post shared by Aviator With Me (@aviator_with_me)