கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புது படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே தியேட்டருக்கு சென்று பார்த்து விடுவார்கள். ஆனால் இப்போது ஓடிடி தளம், இணையதளத்தில் புது படங்களை பார்ப்பதால் தியேட்டரை நோக்கி செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.

அதிலும் தியேட்டரில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓடிடி தளங்களில் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதால் திரையரங்குகள் வெகு காலம் நீடிக்காது என்பதை திரையரங்கு உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.