ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு தான் வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளை பயின்று வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் கோமாரம் பீம் ஆசியாபாத் மாவட்டத்தில் அர்ஷித் அஷ்ரித்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வியட்நாம் கென் தொ நகரில் உள்ள மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ஷித் நேற்று தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார்.

 

அப்போது பைக்கை அர்ஷித் ஓட்டியுள்ளார். இவர் வேகமாக வளைவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற அர்ஷித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.