உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தாந்திரியர் ஒருவரால் ஒரு பெண்ணும், அவரது மகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “களிமண் செங்கற்களை தங்கமாக மாற்றி தருவேன்” எனக் கூறி, மக்களை ஏமாற்றிய குல்ஷன் லோதி என்ற தாந்திரி, ஒரு வீட்டிற்கு ஏழு நாட்களாக தொடர்ந்து வந்துள்ளார். அவர் சூனியம் செய்கிறேன் என்று கூறி, பூஜை செய்வது போல நடித்துள்ளார்.

அவர் அந்த வீட்டில்  பெண்ணிடம் “உடல் உறவுக்கு சம்மதம் அளித்தால்தான் செங்கல் தங்கமாக மாறும்” என்று சொல்லி மிரட்டியுள்ளார். கடந்த மே 30ஆம் தேதி அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அந்த மந்திரவாதி பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரிடமிருந்து பூஜைக்காக 30000 ரூபாய் வரை பணம் பெற்றார்.

அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் மகளுக்கும் அவர் கடந்த 3-ம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்து ஆபாசமாக நடந்து கொண்டார். இதன் காரணமாக அந்த பெண் பின்னர் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மந்திரவாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.