
தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களை சென்றடைகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இதேபோன்று நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.
மேலும் இதன் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.