உத்திரப்பிரேதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தில் நடந்த மாமியார்–மருமகன் காதல் சம்பவம் இன்னும் மறக்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது ஷாஜஹான்பூர் மாவட்டத்திலும் அதே மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலன் தாலுகாவின் தேவ்காலி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளுக்காக மணமகன் தேடிய போது, வாலிபரை தன்னுடைய மகளுக்கு மாப்பிள்ளையாக பேசி முடித்தார். ஆனால் திடீரென மாப்பிள்ளை மீது மாமியாருக்கு காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அந்த பெண், தனது நான்கு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். மகளுக்கான திருமண ஒப்பந்தத்துக்குப் பிறகு, அவளும், வருங்கால மருமகனும் தொலைபேசியில் பேசத் தொடங்கினர். இதனால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர், இருவரும் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று, திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண் தனியாக வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த விவகாரம் தற்போது கிராமத்தில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. குடும்பத்தினர் இதைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை என்றாலும், கிராம மக்கள் “மாமியார் தன் மருமகனையே திருமணம் செய்துள்ளார்” என்று கூறி வருகின்றனர். இதற்கு முன், அலிகர் மாவட்டத்தில் மாமியார் மருமகனுடன் காதலித்து ஓடிப்போன சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது.

அந்தச் சம்பவத்தில் பெண்ணின் மகள் உடல்நிலை மோசமடைந்தது. பல நாட்களுக்குப் பிறகு இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்ததும், அந்த பெண் மருமகனுடன் வாழ பிடிவாதமாக இருந்ததும் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது ஷாஜஹான்பூர் பகுதியிலும் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவமும்நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.