சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் பாதுகாப்பு சீருடை அல்லது கையுறை இல்லாமலேயே, ஒரு பெரிய தேன் கூட்டில் இருந்து அமைதியாக தேனை எடுத்து வைக்கிறார். இந்த அதிர்ச்சியான செயலில், அவரை சுற்றி நிறைய தேனீக்கள் பறந்தும் ஒரே ஒரு தேனீயும் அவரை கடிக்கவில்லை என்பது தான் இக்காட்சியின் சிறப்பு.
This honey hunter collects wild honey but stays super friendly with the bees 🐝🍯
— Tansu Yegen (@TansuYegen) May 17, 2025
இந்த வீடியோவில், அந்த நபர் சற்றும் பயப்படாமல், நிதானமாக தேன் கூட்டைத் தொடுகிறார். தேனீக்கள் அவரை சுற்றி மிதமாக பறக்கின்றன. அதே நேரத்தில், அவர் அந்த கூட்டிலிருந்து தூய தேனை நேரடியாகத் தனது கரங்களால் எடுத்து பானையில் சேகரிக்கிறார். இது அவருக்கு தேனீக்களுடன் உள்ள இயற்கையான இணைப்பையும், அவருடைய அனுபவத்தின் தாக்கத்தையும் காட்டுகிறது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. பலர், “இது மந்திரமா?” என வியப்பும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். மற்றொரு பகுதி நெட்டிசன்கள், “இதை வீட்டில் யாரும் முயற்சிக்கவேண்டாம், இதற்குப் பின்னால் பல ஆண்டுகளுக்கான அனுபவமும் வல்லுநரின் புரிதலும் உள்ளது” என எச்சரிக்கின்றனர்.
இயற்கையுடனான மனித ஒத்துழைப்பின் அற்புதமான எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நம்மை மீண்டும் இயற்கைக்கு அருகிலாக கொண்டு செல்லும் என்பது உறுதி!
